தூத்துக்குடியில், 19-வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை


  தூத்துக்குடியில், 19-வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகாரளித்துள்ளனர்.
 அந்த பெண்ணை, அதே ஊரை சேர்ந்த தனுஷ்கோடி என்ற 55 வயது முதியவரும், 45 வயதான சின்னசாமி என்பவரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது தெரியவந்துள்ளது.
 பாதிக்கப்பட்ட பெண் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் கருத்தரித்திருப்பது தெரிவந்துள்ளது. அதனால், அதிர்சியடைந்த பெற்றோர், அவரிடம் விசாரித்த போது நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
 குற்றம்சாட்டப்பட்ட இருவரும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். அதனால், பாதிக்கப்பட்டவர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் புகாரளித்துள்ளனர்.

                                           -பசுமை நாயகன்