சிறுமி சடலமாக மீட்பு: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்று விசாரணை

        தூத்துக்குடியில் பள்ளி மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே இருக்கும் தாதன்குளத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் மகள் புனிதா. இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.
       இந்நிலையில் அவரது சடலம் இன்று காலையில் ரயில்வே பாலம் அருகில் இருக்கும் முட்புதரில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
பிரேதத்தை கைப்பற்றி செய்துங்கநல்லூர் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாணவியின் சடலத்தில் நகக் கீறல்கள் இருந்ததால், மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.